திண்டுக்கல்: தெருநாய்கள் கடித்ததில் 6 செம்மறி ஆடுகள் பரிதாபமாக உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தெருநாய்கள் கடித்ததில் 6 செம்மறி ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. செல்லப்பநாயக்கன்பட்டி அருகே வசித்து வரும் விவசாயி குமரன் 8 செம்மறி ஆடுகளை வாங்கி வளர்த்து வந்துள்ளார். வழக்கம்போல் தனது செம்மறி ஆடுகளை அடைத்துவிட்டு சென்றுள்ளார். இன்று காலை வந்து பார்த்தபோது 6 ஆடுகள் நாய்கள் கடித்து உயிரிழந்து கிடந்தன. மேலும் ஒரு ஆட்டை காணவில்லை எனவும், மற்றொரு ஆடு பலத்த காயங்களுடன் இருந்ததாகவும் விவசாயி வேதனை தெரிவித்துள்ளார். 

Night
Day