திண்டுக்கல்: பழங்குடியின மக்களின் விழாவை புறக்கணித்த ஆட்சியர் அதிகாரிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் நடைபெற்ற பழங்குடியின மக்களுக்கான மனிதநேய வார விழாவை ஆட்சியர் முதல் ஊராட்சி மன்ற தலைவர் வரை அனைவரும் புறக்கணித்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், கடந்த ஒரு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வந்த மனித நேய வார விழாவின் நிறைவு விழா, அழகம்பட்டியில் நடைபெற்றது. இதில் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளின் வருகைக்காக மாணவர்கள் காத்திருந்த நிலையில், அதிகாரிகள் வராததால் 3 மணி நேரம் தாமதமாக விழா நடத்தப்பட்டது. விழாவில் பங்கேற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினத்துறை அதிகாரிகளும் சில நிமிடங்களிலேயே புறப்பட்டதால் பொதுமக்களும், மாணவர்களும் அதிருப்தி அடைந்தனர். 

Night
Day