திண்டுக்கல்: பழுதடைந்த சாலையை சரி செய்யக்கோரி அரசு பேருந்தை சிறைப்பிடித்த பொதுமக்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பழுதடைந்த சாலையை சரி செய்யக்கோரி அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நத்தம் அருகே  கோமணாம்பட்டி, சாத்தம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊர்களுக்கு செல்லும் சாலை தற்போது மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இந்த சாலையை சரி செய்யக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நத்தம் போலசார் மற்றும் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Night
Day