திண்டுக்கல்: மாரியம்மன் கோவில் விழாவில் மண்டகப்படி நடத்த கோட்டாட்சியர் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டத்தில் கோயில் விழா மண்டகப்படி நடத்த அனுமதி கோரி பட்டியலின மக்‍கள் நடத்திய போராட்டம் குறித்த செய்தி வெளியிட்ட ஜெயா ப்ளஸ் செய்தி தொலைக்காட்சிக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

பழைய வத்தலகுண்டு மஹா பரமேஸ்வரி மாரியம்மன் கோயிலில் மண்டகப்படி கேட்டு, பட்டியலின மக்கள் ஆயிரத்து 500 பேர் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த விரிவான செய்தி ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் தொடர்ந்து ஒளிபரப்பானது. இந்த கோயிலில், வைகாசி மாதம் திருவிழா காலங்களில் முதல் வார வெள்ளிக்கிழமையில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் அம்மனுக்‍கு மண்டகப்படி  நடத்தப்படும் என திண்டுக்கல் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இதனால் மகிழ்ச்சியுற்ற கிராம மக்கள் இது குறித்த செய்தியை ஒளிபரப்பிய ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவித்தனர்.

varient
Night
Day