திண்டுக்கல்: வெறி நாய் கடித்ததில் சிறுவன் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே வெறி நாய் கடித்ததில் சிறுவன் உட்பட 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அக்கரைப்பட்டியில்  தெருநாய்க்களின் தொல்லை அதிகரித்து காணப்படும் நிலையில் கடந்த 3 நாட்களில் சிறுவன் உட்பட 10 க்கும் மேற்பட்டவர்களை வெறி நாய் கடித்து உள்ளது.  இதில் மூன்று பேர் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். எனவே,  தெருநாய்களிடம் இருந்து மக்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Night
Day