திண்டுக்கல்: வேறு நோயாளியின் மாத்திரைகளை மாணவிக்கு தந்த அவலம் - தனியார் மருத்துவமனை முற்றுகை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு, வேறு நோயாளியின் மாத்திரைகளை வழங்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது. மதீனா நகரை சேர்ந்த சேக் மைதீன் என்பவரின் 18 வயது மகள் உடல்நலக்குறைவால் பழனியில் உள்ள சஞ்சய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு வழங்கப்பட்ட மாத்திரைகளை உட்கொண்ட மாணவிக்கு மேலும் உடல்நிலை சரியில்லாமல் போனது. பெற்றோர் மருந்து சீட்டை சரிபார்த்தபோது, 49 வயது பெண் நோயாளிக்கு தரப்பட வேண்டிய மாத்திரைகளை வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து பழனி சஞ்சய் மருத்துவமனையை முற்றுகையிட்டு இளம்பெண்ணின் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

Night
Day