திண்டுக்கல்: 27 ஆண்டுகள் கழித்து தாங்கள் படித்த பள்ளியில் சந்தித்த முன்னாள் மாணவர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 27 ஆண்டுகள் கழித்து தாங்கள் படித்த பள்ளியில் சந்தித்த முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களின் காலை தொட்டு வணங்கி பூங்கொத்து கொடுத்து மகிழ்ந்தனர். வேடசந்தூர் எரியோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 1997 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் சந்திப்பு விழா மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை மேளதாளம் முழங்க, பட்டாசுகள் வெடித்து அழைத்து வந்தனர். பின்னர் தங்களுக்கு கல்வி புகட்டிய ஆசிரியர்களின் காலை தொட்டு வணங்கி பூங்கொத்து கொடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Night
Day