திண்டுக்‍கல்: ஊராட்சி செயலாளரை மீண்டும் பணியமர்த்தியதற்கு எதிர்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் தருமத்துப்பட்டி ஊராட்சியில் தலைவர், துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தருமத்துப்பட்டி ஊராட்சி மன்ற செயலாளர் இன்னாசி என்பவர் ஊராட்சி நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால், கடந்த ஆண்டு தற்காலிக பணிநீக்‍கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இன்னாசியை, வட்டார வளர்ச்சி அலுவலர் மீண்டும் பணியமர்த்தியுள்ளார். இதனைக்‍ கண்டித்து ஊராட்சி மன்றத் தலைவர் மருதமுத்து, துணைத்தலைவர் கிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட 9 பேர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். 

Night
Day