திண்டுக்‍கல்: கல்லறை தோட்டத்தை ஆக்‍கிரமிக்‍கும் தனி நபர்கள் மீது நடவடிக்‍கை எடுக்‍க கோரிக்‍கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் ஆத்தூர் அருகே 300 வருடங்களாக பயன்படுத்தி வந்த கல்லறை தோட்டத்தை ஆக்கிரமிக்கும் தனி நபர்கள் மீது நடவடிக்‍கை எடுக்‍காவிட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர். வெள்ளோடு ஊராட்சிக்கு உட்பட்ட சிறுநாயக்கன்பட்டியில் சுமார் 5 ஆயிரத்துக்‍கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இறப்பவர்களை கடந்த 300 ஆண்டுகளுக்கு மேலாக திண்டுக்கல் - மதுரை சாலையில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்‍கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6 மாதமாக தனி நபர்கள் இருவர் கல்லறை தோட்டத்தை அபகரிக்கும் நோக்கில் செயல்படுவதாக குற்றம்சாட்டி சுமார் 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். 

Night
Day