திமுக, அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கப் போவதாக கூறுவது வேடிக்கை - தமிழிசை சௌந்தரராஜன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 கடந்த காலங்களில் அரசியலமைப்பு சட்டத்தை எடுத்து மிதித்தவர்கள், கிழித்தவர்கள், எரித்தவர்கள் இன்று அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கப் போவதாக கூறுவது வேடிக்கையாக உள்ளதாக திமுக அரசை புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். 


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கிழித்தற்காக கைது செய்யப்பட்டபோது நீதிமன்றத்தில் சட்ட புத்தகத்தை கிழிக்கவில்லை காகிதத்தை தான் கிழித்தோம் எனக் கூறி திமுகவினர் வெளி வந்த வரலாறும் உண்டு என தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட திமுக கூட்டணியை சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியலமைப்பை காக்கப்போகிறோம் என்று கூறுவது வேடிக்கை என குறிப்பிட்டுள்ள அவர், வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வார்களே தவிர வழிநடத்த மாட்டார்கள் என கூறியுள்ளார்.

Night
Day