திமுக அரசு ஆடு, மாடு, பன்றிகளுடன் கூட கூட்டணி வைக்க தயாராக உள்ளது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக அரசு ஆடு, மாடு, பன்றிகளுடன் கூட கூட்டணி வைக்க தயாராக உள்ளது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மொழிபோர் தியாகிகளுக்கு வீரவணக்க பொதுக்கூட்டம் தாஜ் திடலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அரசு ஆடு, மாடு, பன்றிகளுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளது என்றும், சேலம் மாநாட்டுக்கு 5 ஆயிரம் தன்னார்வலர்களை ஏற்பாடு செய்த விளம்பர திமுக அரசு, வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு உதவாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

Night
Day