திமுக ஆட்சியில் போதை புழக்கம் அதிகரிப்பு - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேலச்செவல் பகுதியில் பெருமளவில் ​திரண்டிருந்த கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே எழுச்சியுரை ஆற்றிய புரட்சித்தாய் சின்னம்மா, 1989ம் ஆண்டு இதே இடத்தில் புரட்சித்தலைவி அம்மா கொடியேற்றி, உரையாற்றிய நிகழ்ச்சி தனக்‍கு நினைவுக்‍கு வருவதாக தெரிவித்தார். அப்போது தானும் உடன் இருந்ததாகவும், தற்போது அம்மா இல்லையே என்ற கவலை தன்னை ஆட்கொண்டுள்ளதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார். மக்‍கள் அனைவரும் நிச்சயம் எங்களுக்கு துணையாக இருப்பீர்கள் - நான் உங்களுக்கு துணையாக இருப்பேன் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா உறுதிபட கூறினார். நாளை எனது பிறந்தநாள் - நான் உங்களோடு இருக்க வேண்டும் என்று தான் இங்கு வந்துவிட்டேன்- நிச்சயமாக நமது ஆட்சி வந்தவுடன் எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் எனது லட்சியம் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

varient
Night
Day