திமுக ஊழல் அமைச்சர்கள் விரைவில் வேட்டையாடப்படுவார்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக ஊழல் அமைச்சர்கள் விரைவில் வேட்டையாடப்படுவார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நாடாளுமன்ற தேர்தலுக்கான கட்சி அலுவலகத்தை அண்ணாமலை திறந்து வைத்தார். இதையடுத்து யாத்திரையில் பங்கேற்று பொதுமேடையில் பேசினார். அப்போது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் முதல்வர் பொய் பேசி வருவதாகவும், சட்டமன்ற உறுப்பினர் ராஜா, ரவுடி போல் செயல்பட்டு வருவதாகவும் சாடினார். 

varient
Night
Day