திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி விடுதலையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக எம்எல்ஏ பழனியாண்டியை விடுதலை செய்ததை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


திமுக எம்எல்ஏ பழனியாண்டிக்கு சொந்தமான கல் உடைக்கும் ஆலையில் கடந்த 2016ஆம் நடந்த விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாக பழனியாண்டிக்கு எதிராக திருச்சி தொழில் பாதுகாப்புத்துறை துணை இயக்குனர் கரூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவில் இருந்து பழனியாண்டியை விடுதலை செய்து கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மறு ஆய்வு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், திமுக எம்எல்ஏ பழனியாண்டியின் விடுதலையை ரத்து செய்து உத்தரவிட்டது. 

Night
Day