திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் சாட்டை துரைமுருகன் விடுவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அவதூறு வழக்கில் கைதான நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் விடுவிக்கப்பட்டார். முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசி மேடையில் பாடியதாக திருச்சி திமுக ஐடி விங்கை சேர்ந்த அருண் கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் துரைமுருகனை கைது செய்தனர். 5 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், திருச்சி கணினி குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் துரைமுருகன் ஆஜர்படுத்தப்பட்டார்.  அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் அனுப்ப நீதிபதி சுவாமிநாதன் மறுத்ததை அடுத்து போலீசார் அவரை விடுவித்தனர். இந்நிலையில், மேடையில் பாடியது தன்னுடைய பாடல் அல்ல என்றும், வழக்கை ரத்து செய்ய நீதிமன்றத்தை நாடுவேன் எனவும் சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Night
Day