திமுக பேரணிக்கு மாணவர்களை வலுக்கட்டாயமாக அனுப்பிய கல்லூரி முதல்வர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற திமுக பேரணிக்கு மாநில கல்லூரி மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காமராஜர் சாலையில் செயல்பட்டு வரும் மாநில கல்லூரி மாணவர்களை, கல்லூரி முதல்வர் ராமன் திமுக நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ராயபுரம் ராபின்சன் பூங்கா அருகே திமுக மாணவர் அணி பேரணி நடைபெற்றது. இதற்கு, ஆட்களை சேர்ப்பதற்காக மாநில கல்லூரி மாணவர்களை, கல்லூரி முதல்வேரே வலுகட்டாயமாக அழைத்து சென்றதோடு, பேரணிக்கு வராத மாணவர்களை கல்லூரி முதல்வர் ராமன் மிரட்டுவதாக கூறப்படுகிறது.

Night
Day