திமுக மேயரின் மருமகள் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாநகராட்சி மேயரின் மருமகள் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுகவை சேர்ந்த சேலம் மாநகராட்சி மேயரான  ராமச்சந்திரனின்  மகன் சுதர்சன்பாபுவிற்கும் அவரது மனைவி சுதாவிற்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சுதா  உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த  உறவினர்கள் சுதாவின் இறப்பில் மர்மம் உள்ளதாகவும், மேயரின் குடும்பத்தினர் கொடுமை படுத்தியதால் அவர் உயிரிழந்தார் என்றும் கூறி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Night
Day