திருச்சியில் அனுமதியின்றி ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தியதாக பிரபல தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் மீது வழக்குப்பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சியில் அனுமதியின்றி ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தியதாக பிரபல தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அரியமங்கலம் எஸ்ஐடி தொழில்நுட்ப கல்லூரி மைதானத்தில் ஹேப்பி டேஸ் என்ற பெயரில் மருத்துவ முகாம் நடத்த அனுமதி பெற்றுவிட்டு, ஹேப்பி ஸ்ட்ரீட் என விளம்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மைதானத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற போலீசார் மக்கள் கூட்டத்தை கலைந்து போக செய்தனர். மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், தனியார் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளர் மா.கா.பா. ஆனந்த் உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

Night
Day