திருச்சியில் திமுக கொடி கட்டிய காரில் ஆடு திருடிய தி.மு.க. உடன்பிறப்புகள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி அருகே சொகுசு காரில் வந்து ஆடுகளை திருடிய திமுகவினரின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

ஸ்ரீரங்கத்தை சேர்ந்த மணிகண்டன், கணேசன் ஆகியோரின் வளர்ப்பு ஆடுகள், கீதாபுரம் பகுதியில் கூட்டமாக நடந்து சென்று கொண்டிருந்தன. அப்போது, அவ்வழியாக திமுக கொடி கட்டிய காரில் வந்த சிலர், ஆடுகளை திருடியுள்ளனர். இதுகுறித்து, மணிகண்டனும், கணேசனும் ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், ஆடுகளை திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.

Night
Day