திருச்சிற்றம்பலத்தில் கழகக் கொடியை ஏற்றி வைத்தார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

அம்மாவின் வழியில் மக்‍கள் பயணம் மேற்கொண்டுள்ள கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, தென்காசி மாவட்டத்தில் திருச்சிற்றம்பலம் பகுதிக்‍கு சென்றபோது, கழகத் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து, செண்டை மேளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலைகளில் ​அஇஅதிமுக கொடிக்‍ கம்பங்கள் அமைக்கப்பட்டு வரவேற்பு பதாகைகள் மற்றும் பேனர்கள் வைக்‍கப்பட்டு, புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்‍கப்பட்டது. 

திருச்சிற்றம்பலம் பேருந்து நிலையம் அருகே கழகக்‍ கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்‍கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, கழகக்‍ கொடியை ஏற்றி வைத்தார்.

திருச்சிற்றம்பலத்தில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு 4 அடி நீள வீரவாள் வழங்கப்பட்டது. இந்த வாளினை கழக வழக்கறிஞர் பூசத்துரை, சின்னம்மாவிடம் வழங்கினார்.

Night
Day