திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 750 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கியும், காளையர்கள் பிடியில் சிக்காமல் சில காளைகளும் போக்கு காட்டின. போட்டியில் வெற்றி பெறும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த போட்டியில் பெண் காவலருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Night
Day