திருச்சி - அல்வா கொடுத்த கவுன்சிலருக்கு மிரட்டல்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயருக்கு அல்வா கொடுத்த விவகாரத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பெண் கவுன்சிலருக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மாதம் 30ம் தேதி நடைபெற்ற திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பெண் கவுன்சிலர் பொற்கொடி, தனது வார்டில் எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை எனக்கூறி மேயர் அன்பழகனுக்கு அல்வா கொடுத்தது பேசுபொருளாகியது. இந்நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் கவுன்சிலர் பொற்கொடி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என மேயர் அன்பழகன் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்த பொற்கொடி, தன்மீது தவறு இல்லை என்றும், செய்தியாளர்கள் தனது கருத்தை தவறாக வெளியிட்டதாக கூறியதால், பத்திரிகையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேயர், கவுன்சிலர்கள் மற்றும் செய்தியாளர்கள் என அனைவருக்கும் இடையே வார்த்தை போர் முற்றியதால், மாநகராட்சி கூட்டமே கூச்சல் குழப்பமாக காணப்பட்டது.

Night
Day