திருச்சி : லால்குடி நீதிமன்ற லிஃப்ட்டில் சிக்கிய வழக்கறிஞர்கள் - 1 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மாவட்டம் லால்குடி நீதிமன்ற லிஃப்ட்டில் சிக்கிய வழக்கறிஞர்களை சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு துறையினர் மீட்டனர். லால்குடியில் தனியார் கட்டிடத்தின் மாடியில் இயங்கிவரும் நீதிமன்றத்திற்கு செல்ல லிஃப்ட் வசதி உள்ளது. இந்நிலையில் லிஃப்ட் திடீரென பழுதாகி நின்ற நிலையில், அதனுள் 6 வழக்கறிஞர்கள் சிக்கி கொன்டனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணிநேர போராட்டத்திற்கு பின்னர், லிஃப்டை உடைத்து வழக்கறிஞர்களை பத்திரமாக மீட்டனர். 

Night
Day