திருச்சி : விமான நிலையத்தில் ரூ.37.39 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி விமான நிலையத்தில் சுமார் 37 லட்ச ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அபுதாபியில் இருந்து இன்று அதிகாலை திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு போலீசார் சோதனையிட்டனர். அப்போது ஆண் பயணி ஒருவர் மறைத்து எடுத்து வந்த 550 கிராம் எடையுள்ள 37 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த பயணியிடம் வான் நுண்ணறிவு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Night
Day