திருச்சி: அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலைமறியல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மண்ணச்சநல்லூர் எதுமலை கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். மண்ணச்சநல்லூரை அடுத்து பெரகம்பி கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில், கடந்த 8 ஆண்டுகளாக இக்கிராமத்தில் உள்ள தார் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து பெரகம்பி கிராம மக்கள் சாலையில் அமர்ந்து 3 மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வருவாய் துறையினரும், காவல்துறையினரும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், கோரிக்கை நிறைவேறாவிட்டால் ஆதார் மற்றும் ரேஷன் கார்டை ஆட்சியரிடம் ஒப்படைப்போம் என தெரிவித்தனர்.

Night
Day