திருச்சி: கோரிக்‍கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தரைக்‍கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்‍க தவறிய திமுக அரசைக்‍ கண்டித்து திருச்சியில் தரைக்‍கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தெருவோர வியாபாரிகள் சட்டத்தை கால நிர்ணயம் செய்து முழுமையாக அமல்படுத்த வேண்டும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மாறாக கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்‍கைகளை வலியுறுத்தி, திருச்சி தெப்பக்குளம் பகுதியில், ஏஐடியூசி தரைக்கடை மற்றும் சிறுகடை வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட தரைக்கடை வியாபாரிகள் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராகவும், காவல்துறையை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

Night
Day