திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தீ விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உற்சவர் அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கும்போது ஏற்பட்ட தீ விபத்தில் அர்ச்சகர்கள் இரண்டு பேர் காயமடைந்தனர். தமிழகத்தில் பிரசித்திபெற்ற தலங்களில் ஒன்றான சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் அர்ச்சகர்கள் குருவாயூரப்பன் மற்றும் நாகநாதன் ஆகியோர் இன்று அதிகாலை உற்சவர் அம்மனுக்கு பூஜை செய்து தீபாதாரணை காண்பித்தனர். அப்போது, உற்சவருக்கு மேல் அமைக்கப்பட்டிருந்த வெட்டிவேர் பந்தலில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இதனை அர்ச்சகர்கள் இருவரும் இணைந்து அணைத்த நிலையில், இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Night
Day