திருச்சி: தரமற்ற சாலையை அமைத்து கொடுத்த ஒப்பந்ததாரர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி திருவெறும்பூர் அருகே தரமற்ற சாலையை அமைத்து கொடுத்த ஒப்பந்ததாரர் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூத்தைப் பாரிலிருந்து எழில் நகர் ரயில்வே கேட் வரை செல்லும் சாலை அமைத்து 15 நாட்களே ஆன நிலையில் சாலையில் புல் முளைத்துள்ளது. மேலும் சாலையில் உள்ள மின் கம்பங்களை அகற்றாமல் அப்படியே சாலை அமைத்துள்ளனர். இதனால் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆட்சியர் உடனடியாக மின்கம்பங்களை மாற்றி தரமற்ற சாலையை அமைத்து கொடுத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day