திருச்சி: போதையில் சாலை நடுவே விசில் அடித்து குத்தாட்டம் போட்ட குடிமகன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில், சாலை நடுவே போதையில் குத்தாட்டம் போட்ட குடிமகனின் அலப்பறை காட்சிகள் வெளியாகியுள்ளன. நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள அரசு மதுபான கடையில் சட்டத்திற்கு புறம்பாக அதிகாலை முதலே கள்ளச்சந்தையில் மது விற்பனை ஜோராக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குடிமகன் ஒருவர் மதுவை வாங்கி குடித்துவிட்டு, சாலை நடுவே விசில் அடித்து குத்தாட்டம் போட்டுள்ளார். எனவே சட்டத்திற்கு புறம்பாக கள்ள சந்தையில் மது விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுத்தால்தான் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

varient
Night
Day