திருச்சி: மக்கள் பணிக்காக வழங்கிய காரை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தும் சேர்மன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி திருவெறும்பூர் திமுக ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அரசு வாகனத்தை தனது சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக திமுகவை சேர்ந்த சேர்ந்த சத்யா கோவிந்தராஜ் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் அரசு பணிகளை மேற்கொள்ள மாநில அரசு வழங்கிய காரை, சத்யா கோவிந்தராஜ், தனது பிள்ளைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவது உள்ளிட்ட சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இததையடுத்து மாவட்ட சத்தியா கோவிந்தராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day