திருச்சி: மத்திய அரசுக்கு எதிராக பெல் நிறுவன தொழிலாளர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சியில் பெல் நிறுவன தொழிலாளர் சங்கங்கள் இணைந்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவெறும்பூர் அருகே மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவன அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசின் ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத போக்குகளை கண்டித்து இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். தேசியக் கல்விக் கொள்கை 2020ஐ ரத்து செய்ய வேண்டும், அனைவருக்கும் வீடு வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு உள்ளிட்ட 10 சங்கங்கள் இணைந்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Night
Day