திருச்சி: மூடாமல் கிடக்கும் பாதாள சாக்கடை பள்ளம் - பள்ளி மாணவ,மாணவிகள் அவதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சியில் பள்ளியின் அருகே தோண்டப்பட்ட பாதாள சாக்கடை ஒரு மாதமாகியும் மூடப்படாததால் பள்ளி மாணவ, மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட நத்தர்ஷா, வள்ளுவர் நகர் மற்றும் ஜீவா நகர் ஆகிய பகுதிகளை இணைக்கும் இடத்தில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கு மிக அருகிலேயே பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட, ஒரு மாத காலம் ஆகியும் பள்ளம் மூடப்படாமல்  கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த அச்சத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர். 

Night
Day