திருச்சி: 2 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி திருவெறும்பூர் அருகே கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லையென பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கும்பக்குடி M.G.R நகரில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் பணிமுடிந்து 2 ஆண்டுகளாகியும் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்த நிலையில் கோடை காலம் தொடங்கி உள்ளதால் உடனடியாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

varient
Night
Day