திருச்சி: 2 கார்கள் அரசுப்பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மாவட்டம் நொச்சியம் அருகே 2 கார்கள் அரசுப்பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. சேலத்தில் இருந்து 12 பேர் 2 கார்களில் சமயபுரம் கோயிலுக்கு புறப்பட்டு சென்றனர். திருவாசி அருகே சென்றபோது 2 கார்களும் ஒன்றன் பின் ஒன்றாக, எதிரே வந்த அரசுப்பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார்களில் பயணம் செய்தவர்கள் உட்பட 25 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் திருச்சி - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Night
Day