திருத்தணி: அதிகாலையில் நிலவிய கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் சில நாட்களாக லேசான பனிமூட்டம் இருந்த நிலையில் இன்று கடும் பனிமூட்டம் நிலவியது. திருத்தணியில் அதிகாலை முதலே பனிமூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், சாலை முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை ஓட்டி சென்றனர்.

Night
Day