திருத்தணி: எம்.ஜி.ஆர். திருவுருவப் படத்திற்கு கழக நிர்வாகிகள் மரியாதை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எம்.ஜி.ஆர். 107 வது பிறந்தநாள் விழாவையொட்டி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகையில் அலங்கரித்து வைக்‍கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு கழக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து ஏழை, எளிய மக்‍களுக்‍கு வேட்டி, சேலை உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தமிழக சட்டமன்ற முன்னாள் அரசு கொறடா பி.எம்.நரசிம்மன், கழக நிர்வாகிகள் கே.ஜி. கண்டிகை கோ. ரஜினி, T.N. தனபால், வேளஞ்சேரி செல்வம், வழக்கறிஞர் ராஜபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதேபோன்று அம்மையார்குப்பத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில், தமிழக சட்டமன்ற முன்னாள் அரசு கொறடா பி.எம்.நரசிம்மன், கழக நிர்வாகிகள் ஏ.பி. சந்திரன், சி.ஜி. கார்த்திகேயன், இ.எம்.எஸ். நடராஜன், உள்ளிட்டோர் கலந்துகொண்டு எம்.ஜி.ஆர், திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Night
Day