திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை முதல் 18-ம் தேதி வரை அம்மாவின் வழியில் மக்கள் பயணம் மேற்கொள்கிறார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த 13, 14 ஆகிய தேதிகளில், "அம்மாவின் வழியில் மக்கள் பயணம்" மேற்கொண்ட, அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, நாங்குநேரி, அம்பாசமுத்திரம், ஆலங்குளம், ராதாபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வரும் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை 'அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை' தொடர்ந்து மேற்கொள்கிறார்.

தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றிடவும், திமுக தலைமையிலான ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டிடவும், பெண்ணினத்தின் பாதுகாப்பை பேணிக் காத்திடவும், கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, "அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை" தொடர்ந்து மேற்கொள்கிறார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 13ம் தேதி திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியிலும், 14ம் தேதி பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியிலும் "அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை" மேற்கொண்டு அங்குள்ள கழகத்தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்தித்த நிலையில், தொடர்ந்து நாங்குநேரி, அம்பாசமுத்திரம், ஆலங்குளம் மற்றும் ராதாபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, "அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை" மேற்கொள்கிறார்.

அதன்படி, வரும் 16ம் தேதி, மாலை 3.30 மணிக்கு நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில், கீழநத்தம், தெற்கூர் மற்றும் வடக்கூர் ஆகிய இடங்களில், புரட்சித்தாய் சின்னம்மா, பொதுமக்களை சந்திக்கிறார். 

தொடர்ந்து மணப்படை வீடு, திருமலை கொழுந்துபுரம், சீவலப்பேரி, பர்கிட்மாநகரம் ஆகிய இடங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் புரட்சித்தாய் சின்னம்மா பங்கேற்கிறார்.

இதனையடுத்து, நடுவக்குறிச்சியில் தெய்வத் திருமகனார், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு, புரட்சித்தாய் சின்னம்மா மரியாதை செலுத்துகிறார். 

தொடர்ந்து அரியகுளம், உத்தமபாண்டியபுரம், கே.டி.சி. நகர்,
ரெட்டியார்பட்டி, பொன்னாக்குடி, மூன்றடைப்பு, நெடுங்குளம், நாங்குநேரி, விஜயநாராயணம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் புரட்சித்தாய் சின்னம்மா பங்கேற்று, கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே உரை நிகழ்த்துகிறார். 

இதனையடுத்து, வரும் 17ம் தேதி மாலை 3.30 மணிக்கு அம்பாசமுத்திரம், ஆலங்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பல்வேறு இடங்களில் புரட்சித்தாய் சின்னம்மா, 'அம்மாவின் வழியில் மக்கள் பயணம்' மேற்கொள்கிறார்.  

அதன்படி, வரும் 17ம் தேதி மாலை 3.30 மணியிலிருந்து, பிராஞ்சேரி விலக்கு, மேலச்செவல், சேரன்மகாதேவி பேருந்து நிலையம், வீரவநல்லூர் பேருந்து நிலையம், வெள்ளாங்குளி, கல்லிடை குறிச்சி, அம்பாசமுத்திரம் பூக்கடை பஜார், அம்பாசமுத்திரம் கல்யாணி தியேட்டர், வீ.கே.புரம், கீழஆம்பூர் பேருந்து நிலையம், பொட்டல்புதூர் சந்தை திடல், வெள்ளிக்குளம், இடைகால் விலக்கு, பாப்பாக்குடி, மேலபாப்பாக்குடி, அரியநாயகிபுரம் ஆகிய இடங்களில் புரட்சித்தாய் சின்னம்மா, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பொதுமக்கள் மற்றும் கழகத் தொண்டர்களிடையே உரையாற்றுகிறார்.
 
கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மேற்கொள்ளும் "அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தில்" கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தொண்டர்கள், புரட்சித்தலைவி அம்மா வழியில் தொடர்ந்து பயணிக்கின்ற அனைத்து தாய்மார்கள், இளம் சமுதாயத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஜாதி, மத பேதமின்றி அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று, கழகப் பொதுச் செயலாளரின் முகாம் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது. 

Night
Day