திருநெல்வேலி: கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருநெல்வேலியில் வணிவரித்துறை அதிகாரியை அலுவலகத்திற்குள் புகுந்து அத்துமீறி கைது செய்த காவல்துறையை கண்டித்து, அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சிப் பொறுப்புக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையில், தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதிப்படி சி.பி.எஸ் பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய மறுத்து வருகிறது. இந்த நிலையில், திருநெல்வேலியில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்த உள்ள அரசு ஊழியர்களை காவல்துறையினரை கொண்டு அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்தனர். 

Night
Day