திருப்பத்தூர்: குடியிருப்பு பகுதியில் மரத்தின் மீதிருந்த சாரைப்பாம்பு மீட்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் மாவட்ட தீயணைப்பு துறை குடியிருப்பு பகுதியில் உள்ள மரத்தின் மீதிருந்த 8 அடி நீள சாரை பாம்பை தீயணைப்பு துறையினர் போராடி பிடித்தனர். தீயணைப்பு துறையினர் குடியிருப்பு பகுதியில் உள்ள மரத்தில் சுமார் 8 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனை அறிந்த தீயணைப்பு துறையினர் அந்த பாம்பை பிடிக்க முயன்றபோது ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு சாரைப்பாம்பு ஊர்ந்து சென்றது. இதனால் சிறிது நேரம் பாம்பு பிடிக்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் திணறினர். சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு மரத்தில் இருந்த சாரைப் பாம்பை கீழே தள்ளி தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். 

Night
Day