திருப்பத்தூர்: சரக்கு வாகனத்தில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் அருகே மலைப்பாதையில் சரக்கு வாகனத்தில் ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புது நாடு பகுதியில் வசிக்கும் பள்ளி குழந்தைகள், கீழூரில் உள்ள பள்ளிக்கு தினந்தோறும் ஆபத்தான முறையில் சரக்கு வாகனத்தில் பயணிக்கின்றனர். இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில் சாலையை சீரமைத்து மாணவர்கள் பள்ளிக்கு செல்ல, ஏதுவாக வாகன வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

Night
Day