திருப்பத்தூர்: சாலை தடுப்பு சுவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - வாலிபர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே சர்வீஸ் சாலை தடுப்புச் சுவர் மீது இருசக்கர வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்தார். நாட்றம்பள்ளியை அடுத்த ஜங்களாபுரம் வெள்ளாளதெருவை சேர்ந்த விஜயகுமார் மேளம் அடிக்கும் தொழில் செய்து வந்தார். இதனிடையே மது போதையில் நாட்றம்பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற அவர், பிரியாணி வாங்கிக் கொண்டு வீடு திரும்பி உள்ளார். அப்போது நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் வந்துபோது தடுப்புச்சுவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day