திருப்பத்தூர்: பள்ளிவாசல்களில் தினசரி நடைமுறைகள் குறித்து விளக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காதர்பேட்டை பள்ளிவாசலில் இஸ்லாமிக் தகவல் மையம் சார்பில் பள்ளி வாசல்களில் நாள்தோறும் நடைபெறும் செயல்பாடுகள் குறித்து அனைத்து மதத்தினர்களுக்கு விளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிற மதத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு மசூதியில், தொழுகைக்காக கைகால் கழுவும் முறை முதல் தொழுகை, திருமணங்கள், இறப்பு தொழுகை, இறுதியாக இறந்தவர்களுக்கு அடக்கம் செய்யும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது.  மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு திருக்குர்ரான் வழங்கப்பட்டது.

varient
Night
Day