திருப்பத்தூர்: பாஜக கொடிக்கம்பம் சேதம் - கழிவுநீர் கால்வாயில் வீச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் மாவட்டம் அகரம் கிராமத்தில் பாஜக கொடி கம்பத்தை சேதப்படுத்தி கழிவுநீர் கால்வாயில் வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அகரம் கிராமத்தில் புதிதாக பாஜக கொடிக்கம்பம் நடுவதற்காக கொடிகம்பம் நடும் மேடை மற்றும் கொடிக்கம்பத்தை தயார் செய்து வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு மர்ம நபர்கள் சிலர் கொடிக்கம்ப மேடையையும், கொடிக்கம்பத்தையும் சேதப்படுத்தி கழிவுநீர் கால்வாயில் வீசிச் சென்றுள்ளனர். தகவல் அறிந்து சென்ற குருசிலாப்பட்டு போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day