திருப்பத்தூர்: மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை - பொதுமக்கள் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனா்.  நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. சுமார் 300-க்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் இந்த மருத்துவமனையில், எந்த ஒரு அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் முல்லை செய்தியாளர்கள் சந்தித்து பேசினா். அப்போது, இந்த அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லை என குற்றம்சாட்டினா்.

Night
Day