திருப்பூர் - தாராபுரத்தில் இடி-மின்னலுடன் கனமழை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரமாக இடி மின்னலுடன் கனமழை பெய்தது. திருப்பூரில் நேற்று காலை முதலே மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலையில், பாளையக்காடு, பாரப்பாளையம், தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

Night
Day