திருப்பூர் : ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கம்பிவேலியில் பாய்ந்த அரசுப் பேருந்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, கம்பிவேலி மீது பாய்ந்த விபத்தில், நல்வாய்ப்பாக பயணிகள் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர்.   மதுரையில் இருந்து திருப்பூர் நோக்கி பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்புறமாக வந்த கார் திடீரென திரும்ப முற்படும்போது, காரின் மீது மோதாமல் இருக்க அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தை திருப்ப முயன்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அருகில் இருந்த கம்பிவேலி மீது பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக, பயணிகள் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர்.

Night
Day