திருப்பூர் : கொளத்துப்பாளையத்தில் தீவிர கண்காணிப்பு - ரூ. 10 லட்சம் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் கொளத்துப்பாளையம் பகுதியில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த சொகுசு காரை ஆய்வு செய்தனர். அதில் 10 லட்சம் ரூபாய் ரொக்க பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காரை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் போளரை கிராமத்தை சேர்ந்த கட்டட பொறியாளர் செந்தமிழ்ச்செல்வன் என்பதும், வீடு கட்டுவதற்காக வாடிக்‍கையாளரிடம் பணத்தை பெற்று வந்ததாகவும் தெரிவித்தார். எனினும் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்து தாராபுரம் சார் கருவூலத்தில் அதிகாரிகள் ஒப்படைத்ததுடன், ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுக்‍ கொள்ளும்படி தெரிவித்தனர். 

varient
Night
Day