திருப்பூர்: அமராவதி அணையிலிருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையில் இருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது கோடை காலம் என்பதால் ஆங்காங்கே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்காக வரும் 21ம் தேதி வரை 235 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

Night
Day