திருப்பூர்: ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையின் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை, கோபி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் தூய்மை பணியாளர்களுக்கு தினசரி 725 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் திருப்பூரில் 333 ரூபாய் வழங்கப்படுவதாக ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் குற்றம் சாட்டினர். இதனை கண்டித்து 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அரசு மருத்துவமனையில் துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. 

Night
Day