திருப்பூர்: குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 11 ஆம் தேதி நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தி மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினா் ரயில் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனா். அப்போது, குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா். இந்த போராட்டத்தில் ஈடுப்பட்ட 30-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினா் கைது செய்தனர்.

Night
Day